search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தையல் எந்திரம்"

    • குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
    • கணவனால் கைவிடப்பட்டவர், விதவை, ஏழை ஆகியோருக்கு இலவச தையல் எந்திரம் வழங்கப்பட்டு வருகிறது.

    திருப்பூர்:

    சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தினை கணினி மையம் ஆக்குவது தொடர்பாக அதற்கான வலை பயன்பாடு ஒன்று டிஎன்இஜிஏ மூலம் தயார் செய்யப்பட்டு, அரசு இ-சேவை மையங்களில் அதற்கான லிங்க் வழங்கப்பட்டுள்ளது.

    எனவே, சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்டு தோறும் சமூக நலத்துறையின் மூலம் கணவனால் கைவிடப்பட்டவர், விதவை மற்றும் ஏழை ஆகியோருக்கு இலவச தையல் எந்திரம் வழங்கப்பட்டு வருகிறது.

    2023-24ம் ஆண்டிற்கான இலவச தையல் எந்திரம் பெறவிரும்புவோர், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000 க்கு மிகாமலும், 20 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் (பள்ளிசான்று அல்லது வயது சான்று), 6 மாதத்திற்கு குறையாத தையல் பயிற்சி சான்று, ஜாதிசான்று, விதவை சான்று, கணவனால் கைவிடப்பட்டவர் சான்று, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் பயனாளியின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் இனி வருங்காலங்களில் தகுதியான நபர்கள் அருகில் உள்ள அரசு இ- சேவை மையங்களை அணுகி விண்ணப்பம் செய்து பயன் பெறுமாறு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார். 

    • இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திட வருவாய் வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட வருமானச் சான்று பெறவேண்டும்.
    • வருகிற 23-ந் தேதிபிற்பகல் 5 மணிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட சமூக நலத்துறையின் வாயிலாக இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் வாயிலாக விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்ற ஏழைப் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்திட வருவாய் வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட வருமானச் சான்று பெறவேண்டும். பயனாளியின் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்க்குள் இருக்க வேண்டும்.

    வட்டாட்சியரிடம் பெறப்பட்ட இருப்பி டச் சான்று, பதிவு பெற்ற தையல் நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட தையல் பயிற்சி சான்று, ஜாதிச் சான்று, விண்ணப்பதாரரின் வண்ண புகைப்படம் - 2, வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட விதவை, கணவனால் கைவிடப்பட்டவர், ஆதரவற்றவர் என்பதற்கான சான்று, ஆதார் அடையாள அட்டை ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், எண்.30சி வ.உ.சி. நகர், 5-வது தெரு, கச்சிராப்பாளையம் ரோடு, கள்ளக்குறிச்சி என்ற முகவரியில் வருகிற 23-ந் தேதிபிற்பகல் 5 மணிக்குள் விண்ணப்பித்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

    • திருநங்கைகளுக்கு தையல் எந்திரம் வழங்கப்பட்டது.
    • சுயதொழில் செய்ய விரும்புவோர் தொடர்பாக பட்டியல் எடுக்கப்பட்டது.

    மதுரை

    திருநங்கைகளுக்கு சமூகத்தில் உரிய மரியாதை தரப்படுவது இல்லை. எனவே அவர்கள் பாலியல் மற்றும் பிச்சை எடுத்து பிழைக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் திருநங்கைகளுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் சுயதொழில் ஏற்படுத்தித் தருவது என்று மதுரை மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு ('டான்சாக்ஸ்') முடிவு செய்தது. இதன்படி மாவட்ட அளவில் சுயதொழில் செய்ய விரும்புவோர் தொடர்பாக பட்டியல் எடுக்கப்பட்டது. இதில் திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டனர்.

    இதனைத் தொடர்ந்து அவர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி மற்றும் வாழ்வாதார மேம்பாடு திட்டத்தின் கீழ் சுயதொழில் ஏற்படுத்த மதுரை மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு, மாவட்ட வேலைவாய்ப்பு திறன் வளர்ப்பு பயிற்சி மையம் மற்றும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் இது தொடர்பாக ஆலோசனை நடத்தியது.

    இதனைத் தொடர்ந்து மதுரையில் பிரதர் சிகா மற்றும் அனியம் அறக்கட்டளை மூலம் திருநங்கைகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் 'டான்சாக்ஸ்' மாவட்ட திட்ட மேலாளர் ஜெய பாண்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் முதற் கட்டமாக 40-க்கும் திருநங்கைகளுக்கு, மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்களை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் திட்ட அலுவலர் சுவாமிநாதன், அனியம் அறக் கட்டளை நிறுவனர் அழகு ஜெகன், பிரதர் சிகா தொண்டு நிறுவனத்தை சேர்ந்த பானுமதி, ராஜேசுவரி, பக்கீர் வாவா மற்றும் திருநங்கைகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • இலவச தையல் எந்திரம் வழங்க ராமநாதபுரம் கலெக்டரிடம் பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • 3 மாத கால பயிற்சி நிறைவடைந்து சான்றிதழ் வழங்கப்பட்டது.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவில் செயல்பட்டு வரும் முத்தமிழ் அறக்கட்டளை சார்பாக பல்வேறு பொதுநல சேவைகளை செய்து வருகின்றனர். பசியில்லா தமிழகம் என்ற திட்டம் மூலம் தினந்தோறும் இலவச உணவு வழங்கி ஏழை எளியோரின் பசியை போக்கி வருகின்றனர். மேலும் மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மகளிர் குழு ஒன்றை உருவாக்கி அவர்களுக்கு சிறு தொழில் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் படி முதல் கட்டமாக 30 பெண்களுக்கு ராமநாதபுரம் நேருயுவகேந்திராவுடன் இணைந்து தையல் பயிற்சி அளிக்கப்பட்டது. 3 மாத கால பயிற்சி நிறைவடைந்து சான்றிதழ் வழங்கப்பட்டது.

    பயிற்சி பெற்ற 30 பெண்களும் இலவச தையல் எந்திரம் வழங்க கோரி மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். கலெக்டரும் மனு மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அப்போது முத்தமிழ் அறக்கட்டளை நிறுவனர் சபரிமலைநாதன், தையல் பயிற்சியாளர் பாக்கியலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.

    • குறைதீர்க்கும் முகாமில் மனு கொடுத்த பெண்ணுக்கு உடனடியாக இலவச தையல் எந்திரம் வழங்கப்பட்டது.
    • விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் இந்த முகாம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்றக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது.

    இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்டம், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

    இந்த மனுக்களை கலெக்டர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும் முதல்-அமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீதும் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் அறிவுறுத்தினார்.

    இந்த கூட்டத்தில் திருச்சுழியைச் சேர்ந்த சோனைபாண்டி என்ற பெண் தனக்கு சுயதொழில் புரிய தையல் எந்திரம் வழங்ககோரி இந்த கூட்டத்தில் மனு அளித்தார். அவரது கோரிக்கையை பரிசீலனை செய்து உடனடியாக அவருக்கு இலவச தையல் எந்திரத்தை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.

    மாவட்ட வருவாய் அலுவலர் ரவிகுமார், சமூல நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அலுவலர் இந்திரா, ஆதிதிராவிட நலத்துறை அலுவலர் வித்யா, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) சிவக்குமார், கலெக்டரின்நேர்முக உதவியாளர்(நிலம்) முத்துக்கழுவன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரசேகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர்(கலால்) அமிர்தலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×